சினிமா செய்திகள்

‘மாநாடு’ படப்பிடிப்பில் மண் தரையில் படுத்து தூங்கிய சிம்பு: புகைப்படங்கள் வைரல்

Published

on

சிம்பு நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பின் இடையே சிம்பு மண் தரையில் படுத்து தூங்கிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘மாநாடு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 1000 துணை நடிகர்களுடன் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பின் இடையே சிறிது நேரம் ஓய்வு எடுக்க விரும்பிய சிம்பு மண் தரையில் படுத்து தூங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு ’என்ன ஒரு எளிமை, பெரிய ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக மண் தரையில் படுத்துத் தூங்குகிறார்’ என்று பதிவு செய்து இருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னச்சின்ன நடிகர்கள் கூட தாங்கள் ஓய்வு எடுக்க கேரவன் வேண்டும் என்று கேட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version