சினிமா செய்திகள்

விவேக் மறைவிற்கு சிம்பு செய்த சிறப்பான மரியாதை!

Published

on

பிரபல காமெடி நடிகர் விவேக் சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் பல பிரபலங்கள் மரக்கன்றுகளை தங்கள் வீடுகளில் நட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகை ஆத்மிகா, நடிகர் அருண் விஜய் உள்பட பலர் மரங்கள் நடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சிம்புவின் மாநாடு குழுவினர் விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டு உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மரம் நடும் விழாவில் சிம்பு, வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விவேக் மறைவின்போது இரங்கல் தெரிவித்து சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது சிம்பு தனது படத்தின் படப்பிடிப்பிற்கு முன்பாக விவேக் நினைவாக மரக்கன்றுகளை வைத்துள்ளதற்கு சிம்பு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version