சினிமா செய்திகள்

மறுபடியும் ஒரு பணப்பெட்டி: சிம்புவின் அறிவிப்பால் ஆச்சரியத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் 14 போட்டியாளர்கள் மற்றும் ஒரு சில வைல்ட்கார்ட் போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 பேர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுருதி 15 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து விலகினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆறு பேரில் ஒருவர் டைட்டில் பட்டம் பெறுவார் என்றும் அவருக்கு ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்றும் எத்ரிபார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிம்பு இன்று போட்டியாளர்கள் பேசும்போது மீண்டும் ஒரு பணப்பெட்டி வருவதாகவும் அந்த பெட்டிக்காக நீங்கள் அனைவரும் சண்டை போட வேண்டும் தெரிவிக்கிறார் .

மேலும் அந்த பணப்பெட்டியின் மதிப்பு ரூபாய் 25 லட்சம் என்று சிம்பு கூறியிருப்பதால் போட்டியாளர்கள் ஆச்சரியமடைந்தனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள நிரூப், பாலாஜி, ஜூலி, ரம்யா பாண்டியன், தாமரை மற்றும் அபிராமி ஆகிய ஆறு பேர்களில் இந்த 25 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுக்க யார் யார் சண்டை போடுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version