சினிமா

விரைவில் ரசிகர்களை சந்திக்கும் சிம்பு… எதற்கு தெரியுமா?…

Published

on

பல வருடங்களுக்கு பின் சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தின் வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் கமாட்சி தயாரித்திருந்த மாநாடு படம் ரசிகர்களை கவர்ந்து ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது. இதில், சிம்புவரை தவிர அப்படத்தில் நடித்த மற்ற நடிகர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிம்பு கலந்து கொள்ளாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநாடு வெற்றியை சிம்பு தனது ரசிகர்களுடன் கொண்டாட முடிவெடுத்துள்ளார். இன்று காலை அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்ற தலைவர் டி.வாசு சிம்புவை சந்தித்து புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வழங்கினார். மேலும், விரைவில் ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version