சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு மாஸ் அப்டேட்.. மறக்குமா நெஞ்சம்..!

Published

on

சிம்பு நடிப்பில் கவும்தம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு.

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 15-ம் தேதி முடிந்ததை அடுத்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படப்பிடிப்பு முடிந்ததால் விரைவில் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாடல் மே 6-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

முதலில் சிம்புவை வைத்து நதிகளிலே நீராடும் சூரியனே என்ற படத்தை கௌதம் மேனன் இயக்கி, வேல்ஸ் ஃபிளிம்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அ-ட தலைப்பிற்கு ஏற்ற கதை சரியாக அமையாததால் ஜெயகாந்தன் அவர்களின் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் நாவலைத் தழுவி வெந்து தணிந்தது காடு படம் உருவாகி வருகிறது.

ஏற்கனவே வெந்து தணிந்தது காடு படத்தின் டிசரில் இடம் பெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் ஏ.ஆர்.ரகுமான் குரலில் கேட்போர் மனதை வருடியது.

எனவே மே 6-ம் தேதி ஏ.ஆர்.ரகுமான் குரலில் மறக்குமா நெஞ்சம் பாடல் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் சிங்கிள் பாடலாக வெளியாகுமா ரசிகர்கள் அவளுடன் எதிர்பார்த்துக் காத்து இருக்கிறனர்.

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். மேலும் சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து கொரோனா குமாரு மற்றும் நதிகளிலே நீராடும் சூரியன் படப்பிடிப்புகள் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version