சினிமா செய்திகள்

பத்து தல படத் தயாரிப்பாளர் போட்ட கண்டிஷன்.. ஷாக் ஆன சிம்பு!

Published

on

கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் அண்ணன் ஷிவ் ராஜ்குமார் நடிப்பில் உருவான படம் மஃப்டி. அந்த படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் உருவாகி வருகிறது.

கொரோனாவுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சிம்பு சில நாட்கள் நடித்த பிறகு சில காரணங்களால் படப்பிடிப்பு நின்று போனது. சிம்பு தான் இந்த படம் இடையில் நின்றதற்கான காரணம். எனவே படத்தை டிராப் செய்கிறேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார்.

கொரோனா முதல் அலைக்குப் பிறகு சிம்பு உடல் அமைப்பில் மட்டுமல்லாமல் வேகமாகப் படங்களும் நடிக்கத் தொடங்கினார். ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்படும் மாநாடு படம் நவம்பர் 25-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சிம்பு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பத்து தல படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது. ஆனால் மும்பு சிம்பு இந்த படத்தில் நடித்த போது குண்டாக இருந்தார். இப்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக உள்ளார்.

எனவே படப்பிடிப்பு வரும் முன்பு 20 கிலோ எடையைக் கூட்டிவிட்டு வருமாறு தயாரிப்பாளர் சிம்புவிடம் கூறியுள்ளார். அதை கேட் ஷாக் ஆன சிம்பு, கஷ்டப்பட்டு உடல் எடையைக் குறைத்துள்ளேன். குண்டாகக் காண்பிக்கப் பல தொழில்நுட்பங்கள் மற்றும் ஆடைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குங்கள் என சிம்பு கூறியுள்ளார்.

இந்நிலையில் பத்து தல படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. வெந்து தனிந்தது காடு படப்பிடிப்பில் உள்ள சிம்பு, இன்னும் 20 நாட்களில் அதை முடித்துவிட்டு பத்து தல படப்பிடிப்பில் இணைய உள்ளார்.

அதற்கு முன்னதாக பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக்கின் காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு சிம்புக்காகப் படக்குழு காத்திருக்கும் என கூறப்படுகிறது.

பத்து தல படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version