சினிமா செய்திகள்

கேக் வெட்டி கொண்டாடிய ‘மாநாடு’ படக்குழுவினர்: சிம்பு ரசிகர்களுக்கு நல்ல செய்தி!

Published

on

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வந்த ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று இடையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ‘மாநாடு’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில் திடீரென கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அந்த படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியதை அடுத்து ஓசூரில் உள்ள விமான நிலையத்தில் மூன்று நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஓசூர் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து சிம்பு இறங்கி வரும் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் நேற்று உடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாகவும் இதனையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய தாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அனேகமாக ‘மாநாடு’ திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது சிம்பு ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஆகும்.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் அஜித்தின் ’மங்காத்தா’ படத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என சமீபத்தில் வெங்கட்பிரபு பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version