சினிமா செய்திகள்

ரிலீஸானது ‘மாநாடு’ திரைப்படம்: திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

Published

on

‘மாநாடு’ திரைப்படத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று திட்டமிட்டபடி ‘மாநாடு’ திரைப்படம் சற்று முன்னர் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாநாடு’ திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்த நிலையில் திடீரென நேற்று மாலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் இந்த படத்தின் பிரச்சனை குறித்து நேற்று விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இன்று ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகின. ‘மாநாடு’ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து கலைஞர் டிவிக்காக உதயநிதி ஸ்டாலின் வாங்கியதால் இந்த படத்தின் பெரும் பிரச்சனை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இன்று திட்டமிட்டபடி சற்று முன்னர் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆனது. இன்று காலை 8 மணிக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது என்பதும் இதனை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் முதல் காட்சியை ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆனதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய தளங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version