சினிமா செய்திகள்

‘மாநாடு’ திட்டமிட்டபடி ரிலீஸா? என்ன நடக்குது கோலிவுட்டில்?

Published

on

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் இதனை அடுத்து அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் எதிர்பாராத காரணத்தினால் ‘மாநாடு’ ரிலீஸ் தேதியை தள்ளி போவதாகவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கோலிவுட் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது ‘மாநாடு’ திரைப்படத்தை நாளை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்று இரவு பதினொன்று முப்பது மணிக்கு தயாரிப்பாளர் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்து குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை நாளை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக ‘மாநாடு’ திரைப்படம் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாநாடு திரைப்படம் ரிலீஸ் தேதி அதிக அளவு தள்ளிப்போகாது என்றும் நாளை அல்லது நாளை மறுநாள் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனையடுத்து திரையரங்குகளில் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கு உரிய பணத்தை திருப்பித் தர வேண்டாம் என்ற தகவலும் தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Trending

Exit mobile version