சினிமா செய்திகள்

’மாநாடு’ படத்தின் சூப்பர் அப்டேட்டை தந்த தயாரிப்பாளர்!

Published

on

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இதற்கான பூஜை இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு, அவருடைய உதவியாளர்கள் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் அந்த புகைப்படங்களில் உள்ளனர் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன், உதயா, எஸ்ஏ சந்திரசேகர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்றும் இந்த படம் இவ்வாண்டின் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version