சினிமா செய்திகள்
சிம்பு மீதான மற்றொரு பீப் பாடல் வழக்கு ரத்து!
நடிகர் சிம்பு மீது கோவையில் பதிவு செய்யப்பட்ட பீப் பாடல் குறித்த வழக்கு சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பீப் பாடலொன்றை சிம்பு கம்போஸ் செய்து பாடினார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கின் விசாரணையில் சிம்பு மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் சென்னை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பீப் பாடல் வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
தவறான தகவலின் அடிப்படையில் சிம்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் அளித்ததாகவும் அந்த தகவலின் பேரில் இந்த வழக்கை ரத்து செய்வதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.