சினிமா செய்திகள்
’மாநாடு’ படக்குழுவினர் 300 பேர்களுக்கு சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு!
சிம்பு நடித்து வந்த ’மாநாடு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஓசூரில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிம்பு, வெங்கட் பிரபு உள்பட படக்குழுவினர் அனைவரும் கேக் வேட்டி படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடினார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவு நாளில் சிம்பு படக்குழுவினர் 300 பேர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்து உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விஜய், அஜித் போன்ற மாஸ் நடிகர்கள் தாங்கள் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளில் தங்க காயின் உள்பட பல பரிசுகளை வழங்கி வருகின்றார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சிம்புவும் தன்னுடைய ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளில் 300 பேர்களுக்கு விலையுயர்ந்த வாட்சுகளை பரிசாக வழங்கியுள்ளார். சிம்புவிடம் பரிசு பெற்றவர்களில் ஒருவர் இயக்குனர் வெங்கட்பிரபுவும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’மாநாடு’ படக்குழுவினர் அனைவரும் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜாவின் அட்டகாசமான இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஆயுதபூஜை விடுமுறை நாளில் வெளியாகும் என்று திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’மாநாடு’ படம் நிறைவடைந்ததை அடுத்து சிம்பு அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கவுள்ள ‘நதிகளியே நீராடும் சூரியன்’ படத்தின் படப்ப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank q @SilambarasanTR_ for all the love and support!! Thanks for the watch!!! #OurTimeStartsNow #MaanaaduWrapped thanks to my team!! Soon our #abdulkhaliq will be yours!! #maanaadu pic.twitter.com/bBXFTiJFFW
— venkat prabhu (@vp_offl) July 10, 2021