சினிமா செய்திகள்

நயன்தாரா பாணியில் புத்திசாலித்தனமாக செயல்படும் சிம்பு!

Published

on

ஒரு சில நடிகர்கள் நடிகைகள் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போட வேண்டும் என்பதற்காக சொந்தப் படம் எடுத்து கையை சுட்டுக் கொல்வார்கள். ஆனால் ஒரு சிலர் சுதாரித்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை பல்வேறு துறைகளில் முதலீடு செய்து இலாபம் சம்பாதித்து வருகின்றனர்.

விவசாயம், ஐடி, ஓட்டல், அழகுசாதன பொருட்கள் உற்பத்தி உள்பட பல தொழில்களில் நடிகர் நடிகைகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

அந்தவகையில் சம்பாதித்த பணத்தை புத்திசாலித்தனமாக பல மடங்கு ஆக்கும் வித்தையை கற்றுக் கொண்டவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பு தவிர பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறார் என்பதும் அவர் ஆரம்பித்த அனைத்து துறைகளிலுமே பணம் மழையாக கொட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .

அந்த வகையில் நயன்தாராவின் புத்திசாலித்தனமான இந்த கொள்கையை சிம்பு கடைபிடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு தற்போது நடிப்பில் இருந்து கிடைக்கும் பணம், பிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கிடைக்கும் பணம் ஆகியவற்றை சிறந்த முதலீடுகளில் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக தனது நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அவர் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version