சினிமா செய்திகள்
’மாநாடு 2’ உருவாகிறதா? படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த ரகசியம்!
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தை சினிமா ரசிகர்கள் குறிப்பாக இளைஞர்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் அதிகமாக போற்றப்பட்ட படம் என்பதும் வசூல் செய்த படமும் அனேகமாக மாநாடு படமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் இதுவரை மங்காத்தா திரைப்படம் தான் அதிக வசூலைப் பெற்ற நிலையில் அந்த படத்தின் வசூலை மாநாடு படம் முந்தி விடும் என்றும் கூறப்படுகிறது.
சிம்பு மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவருக்குமே கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகள் கிடைக்காத நிலையில் ஒரே படத்தில் இருவருக்கும் கிடைத்த வெற்றியை இருவருக்கும் மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாநாடு படத்தின் எதிர்பாராத வெற்றி காரணமாக சிம்பு மற்றும் வெங்கட்பிரபு மீண்டும் இணைய உள்ளதாகவும் அந்த படம் ’மாநாடு 2’ படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ’மாநாடு 2’ படம் குறித்த கதை வெங்கட்பிரபு மனதில் வைத்திருக்கிறார் என்றும் அந்த கதையை டெவலப் செய்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவருடைய உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மங்காத்தா 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ள வெங்கட்பிரபு, ’மாநாடு 2’படத்தை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.