சினிமா செய்திகள்
சிம்புவுடன் காதலா? லிவிங் டுகெதர் உண்மையா? குழப்பமான பதிலளித்த நிதி அகர்வால்!
சிம்புவுடன் காதலா? மற்றும் அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்துவது உண்மையா? என்ற கேள்விக்கு ரசிகர்களை குழப்பும் விதத்தில் நடிகை நிதி அகர்வால் பதில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயம் ரவி நடித்த பூமி, சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்த நிதி அகர்வால் தற்போது உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் நடித்தபோது சிம்பு, நிதி அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் இதனை அடுத்து இருவரும் சிம்புவின் வீட்டில் தற்போது லிவிங் டுகதர் ஆக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை நிதி அகர்வால் கூறும்போது, ‘வதந்திகளை பொறுத்தவரை சில உண்மைகள் இருக்கலாம், சில பொய்கள் இருக்கலாம், ஆனால் எது உண்மை எது? பொய் எது? என்பது என்னுடைய பெற்றோருக்கு மட்டும் தெரிந்தால் போதும். மக்கள் சொல்வதை பொருத்தவரை இது ஒரு டிராமா போன்றது தான். நாம் செய்யும் வேலை தான் எல்லாவற்றையும் விட அதிகமாக பேச வைக்கும். அந்த வேலை நடக்கும் வரை நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சிம்புவுடன் காதலா? லிவிங் டுகதர் உண்மையா? என்பதை நேரடியாக சொல்லாமல் பூசி மெழுகி நிதி அகர்வால் கூறிய இந்த பதில் ரசிகர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுலை நிதி அகர்வால் காதலித்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சிம்புவும் இரண்டு முன்னணி நடிகைகளை காதலித்ததாகவும் கருத்து வேறுபாடு காரணமாக அவரும் அந்த காதலில் இருந்து பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு மற்றும் நிதி அகர்வால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.