சினிமா செய்திகள்
மாநாடு தொடர்ந்து வெங்கட்பிரபுவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் சிம்பு!
![Silambarasan and Venkat Prabhu - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/11/Silambarasan-and-Venkat-Prabhu.jpg)
மாநாடு படத்தைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா ஊரடங்கு பிறகு, சிம்பு வேகமாகப் படங்களில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்தில் 30 நாட்களுக்குள் நடித்து முடித்துவிட்டு, இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் சிம்புவின் அப்பா, டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அது அவர்களது குடும்பத்துக்குக் கவுரக் குறைச்சலாக நினைக்கிறார் அவரது மனைவி உஷா ராஜேந்தர். அதை சரி செய்ய, தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது உள்ள நிதி சிக்கலைத் தீர்க்க சிம்பு இலவசமாக ஒரு படத்தை நடித்துக் கொடுப்பார். அந்த படத்தைச் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலில் நின்று தோற்ற ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு உதவு முன்வந்துள்ளது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கான கதை கொரோனா ஊரடங்கின் போது மாநாடு படத்திற்குப் பதிலாகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க தயார் செய்யப்பட்ட கதைதான் இது என்றும், படத்திற்குப் பெயர் கூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
இந்த படத்தின் மூலம் 12 கோடி ரூபாய் லாபம் வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும், அதை முழுவதுமாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதை வைத்துப் பார்க்கும் போது மாநாடு படத்தைத் தொடர்ந்து சிம்பு மீண்டும் வெங்கட்பிரபு படத்தில் நடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.