சினிமா செய்திகள்
பக்தி பரவசத்தில் நடிகர் சிம்பு… புகைப்படத்தை வைரலாக்கிய ரசிகர்கள்
பக்தி பரவசத்துடன் சிம்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் சிம்பு தற்போது மாநாடு படப்பிடிப்புகளில் பிஸியாக உள்ளார். அவரது ஈஸ்வரன் படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. தொடர்ந்து சில காலமாக மிகவும் பாஸிட்டிவ் ஆக வலம் வரும் சிம்புவைப் பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.
சமீபத்தில் பாண்டிச்சேரியில் மாநாடு படப்பிடிப்பின் நடுவே மழை பெய்து இடையூறு ஏற்படுத்திய போதும் மிகுந்த ஒத்துழைப்போடு அந்த ஷெட்யூலை காத்திருந்து முடித்து கொடுத்தாராம் சிம்பு. தற்போது சபரி மலை சீசன் நெருங்கி வருவதால் ஐயப்பனுக்கு சிம்பு மாலை அணிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் முழுவதுமாகப் பக்திப் பரவசத்துடன் காணப்படுகிறார்.
Swamy Saranam ???????? pic.twitter.com/sBPgaMm5eI
— Silambarasan TR (@SilambarasanTR_) December 22, 2020