சினிமா செய்திகள்

எல்லா பிரச்சனைகளும் முடிந்தன.. திரை அரங்குகளில் வெளியானது ஈஸ்வரன்!

Published

on

எல்லா பிரச்சினைகளும் முடிந்து சிலம்பரசன் நடிப்பில் ஈஸ்வரன் படம் இன்று திரை அரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.

சிம்பு AAA படத்தில் நடித்ததில் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய அவர் அடுத்து நடிக்கும் 3 படங்களுக்கு தலா 2.40 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

முன்பு ரிலீஸ் ஆன செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவாகத்தான் வருவேன் உள்ளிட்ட படங்கள் வெளியான போது நிதி நெருக்கடி காரணமாக விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் ஈஸ்வரன் படம் வெளியாகும் போது அது மீண்டும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனது மகனின் திரை வாழ்கையை அழிக்க நினைக்கிறார்கள் என்று டி.ஆர்.பத்திரிக்கையாளர்களை அழைத்துக் கதற, AAA பட தயாரிப்பாளர் ஒருபக்கம் நாங்கள் படத்தை வெளியிடத் தடை வாங்கவில்லை. எங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை அளித்துவிட்டுப் படத்தை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று தற்காலிக நிறுத்தி வைப்பு தான் செய்துள்ளோம் என்று கூறினார். இந்த பிரச்சனைகள் ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற சந்தேகத்தைக் கிளப்பியது.

இந்நிலையில், “எல்லாம் பிரச்சினைகளும் முடிந்தன! ஈஸ்வரன் பிரமாண்டமாக வெளியானது. தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மன்ன, துணைத் தலைவர் கதிரேஷன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. இது ஈஸ்வரன் பொங்கல்! இது நம்ம பொங்கல்!” என்று ஈஸ்வரன் படத்தைத் தயாரித்த பட நிறுவனமான மாதவ் மீடியா டிவிட் செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version