சினிமா செய்திகள்
சித்த மருத்துவர் மேற்பார்வையில் மாநாடு ஷூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து மாநாடு படப்பிடிப்பில் மாஸ் காட்டும் சிம்பு.
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சிம்பு பரபரப்பாகப் படங்களில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்திற்கு 30 நாட்கள் கலஷிட் கொடுத்த சிம்பு, 29 நாட்களில் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் 9 தேதி முதல் மாநாடு ஷூட்டிங்கில் சிம்பு கலந்துக்கொள்வார் என்று நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.
இதில் இன்னும் என்ன சர்பிரைஸ் என்றால் சிம்பு இரண்டு நாட்களில் ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இன்று மாநாடு ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு அதற்கான புகைப்படத்தையும் டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
மேலும் மாநாடு படத்தில் சித்த மருத்துவர் வீரபாபு மேற்பார்வையில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கசாயங்கள் மற்றும் உணவுகளும் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நடைபெற்று வரும் திரைப்பட ஷூட்டிங்கில் இது தனித்துவமாக உள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் பிற படப்பிடிப்புகளில் சித்த மருத்துவர்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மாநாடு ஷூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்றுள்ளது. 40 நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.