சினிமா செய்திகள்
சிம்பு – ராம் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்!
சிம்பு நடிப்பில் ராம் பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகத் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
சிம்புவின் திரை வாழ்க்கையை கொரொனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். கொரோனாவுக்கு முன்பு சிம்பு படப்பிடிப்பிற்குச் சரியாக வரமாட்டார், தயாரிப்பாளர்களின் செலவுகளை அதிகரிப்பார் என்று இருந்தது.
ஆனால் இப்போது ஈஸ்வரன் படத்தை 30 நாட்களில் முடித்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், மாநாடு பட படப்பிடிப்பையும் கிட்டத்தட்ட நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் சில நாட்களே ஷூட்டிங் பாக்கியுள்ளது.
அன்மையில் இயக்குநர் ராம் சிலம்பரசனை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இடம்பெற்று இருந்தார். அந்த படங்கள் இணையத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் சிம்பு, ராம் இருவர் கூட்டணியில் பிரமாண்டமாக ஒரு படம் தயாராக உள்ளதாகவும், இன்னும் தயாரிப்பாளர் மட்டும் முடிவாகவில்லை என்றும், இந்த படம் வெளியானால் சிம்பு, ராம் திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
தற்போது சிம்பு மாநாடு, பத்து தல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து சிம்பு ராம் படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.