சினிமா செய்திகள்

பொய் சொல்பவர் கன்னத்தில் அறை விழும்: உபி முதல்வர் குறித்து நடிகர் சித்தார்த்

Published

on

உத்திரப்பிரதேச மாநில முதல்வர் தெரிவித்த தகவல் குறித்து டுவிட் செய்து உள்ள நடிகர் சித்தார்த் பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பதும் குறிப்பாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக எந்தவித உயிரிழப்புகளும் இல்லை என்றும் அம்மாநில முதல்வர் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகர் சித்தார்த் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பொய் சொன்னால் அறை விழும் என்றும் சாமானியனாக இருந்தாலும் சாமியாராக இருந்தாலும் தலைவராக இருந்தாலும் பொய் சொன்னாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Actor_Siddharth/status/1387038150283776003

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்த கருத்துக்கு நடிகர் சித்தார்த் இந்த ட்விட்டை பதிவு செய்துள்ளார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version