சினிமா செய்திகள்

இப்படி பேசிட்டாங்களே: கதறி அழும் ஸ்ருதி மற்றும் பாவனி ரெட்டி!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் தாமரையின் காயினை ஸ்ருதி எடுத்து விட்டதாக குற்றம் சாட்டி தாமரை கொஞ்சம் அதிகமாக பேசி விட்டதாக தெரிகிறது. கேவலமாக இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்றும், உங்களை இப்படித்தான் வளர்த்தார்களா? என்றும் அத்துமீறிய வார்த்தைகளை தாமரை விட்டுவிட்டதாக ஸ்ருதி மற்றும் பவானி ரெட்டி ஆகிய இருவரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிந்தது

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் ஸ்ருதி கதறி அழுதவாறு தாமரை கூறிய சொற்களை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் இது குறித்து கூறிய போது, ‘என்னுடைய வளர்ப்பு குறித்து பேசிவிட்டார்கள், நீ எல்லாம் ஒரு பிள்ளையா என்று பேசுகிறார்கள், உங்களுக்கு அசிங்கமா இல்லையா என்று பேசி விட்டார்கள் என கூறி ஸ்ருதி கதறி அழ அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பாவனியும் அழுது கொண்டிருப்பது காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளது.

ஒரு சிறிய விஷயத்தை அதுவும் விளையாட்டின் ஒரு பகுதி என்று கூட புரிந்து கொள்ளாமல் ஸ்ருதியை கொஞ்சம் அத்துமீறி தாமரை பேசி விட்டதாக நெட்டிசன்களும் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்

இந்த வார நாமினேஷன் தாமரை இல்லாததால் அவர் தப்பித்தார் என்றும், ஒருவேளை இந்த வாரம் நாமினேஷன் இருந்திருந்தால் கண்டிப்பாக தாமரையை ரசிகர்கள் வெளியேற்றி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version