கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரில் இருந்து திடீரென விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்: என்ன காரணம்?

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடர் முடிவடைந்தது என்பதும் இந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. நேற்று புனே மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையே இரண்டாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டி20 தொடர்களிலும் சரி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒருநாள் தொடரிலும் சரி மிக அபாரமாக விளையாடிய வீரர்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் தற்போது ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியின் போது இடது தோள்பட்டையில் இவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இந்த காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் வெளியேறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரின் டெல்லி அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டு வருகிறார் என்பதும், இதனால் ஐபிஎல் டெல்லி அணியில் இவர் ஒரு சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version