கிரிக்கெட்

அறிமுகமான முதல் டெஸ்ட்டில் சதம்: ஸ்ரேயாஸ் அய்யர் அசத்தல்!

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று கான்பூரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது என்பதும் நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று 2-வது ஆட்டத்தில் மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதும் சற்று முன் வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்டின் ஹைலைட்டாக அறிமுக போட்டியிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்துள்ளார் என்பதும் அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 105 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜடேஜா 50 ரன்களும் கில் 52 ரன்களும் எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அறிமுகப் போட்டியில் ரோகித் சர்மா, குண்டப்பா விஸ்வநாத், தீபக் சோஹான் ஆகியோர் சதமடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை டிம் சவுதி 4 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். இன்னும் 3 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் இந்தியா 350 ரன்களை தாண்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version