தமிழ்நாடு

நவம்பர் 1ஆம் தேதி பள்ளித்திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது பள்ளிகள் திறப்பது தள்ளி போகுமா? என்பது குறித்து அக்டோபர் 12ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் திறக்கலாமா? அல்லது தள்ளிப்போட வேண்டுமா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் இந்த ஆலோசனையில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின் படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு முதலில் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்திவிட்டு அதன்பின் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக்குப் பின்னரே ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது குறித்து தெரியும் என்பதும் அதேபோல் பொது தேர்வு நடத்துவது குறித்த முடிவுகளும் எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version