தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு ஆண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைப்பு!

Published

on

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஆண்டு ஈட்டிய ஊதிய விடுப்பை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஈட்டிய ஊதிய விடுப்பு என்றால் என்ன?

தமிழக அரசு ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தால், அவர்களுக்கு 15 நாள் ஈட்டிய விடுப்பு வழங்கப்படும். இந்த ஈட்டிய விடுப்பை அவர்கள் ஊழியர்கள் விடுப்பாகவோ அல்லது பணமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

தமிழக அரசு இந்த ஈட்டிய விடுப்பை ஊழியர்களுக்கு நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளது. எனவே தமிழக அரசு ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்திருந்தாலும், ஒரு ஆண்டுக்கு இந்த விடுப்பைப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால், மாநில அரசின் வருவாய் பல்வேறு வகையில் குறைந்துள்ளது.

எனவே செலவுகளைக் குறைக்கும் விதமாகத் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கேரளா, தெலுங்கானா மற்றும் சில மாநிலங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தைக் குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version