Connect with us

இந்தியா

ஓடிபி இல்லை, செல்போன் ஹேக் இல்லை.. ஆனால் கோடிக்கணக்கில் மாயமாகும் பணம்: அதிர்ச்சி தகவல்

Published

on

ஆன்லைன் மூலம் நெட்பேங்கில் பணம் அனுப்ப வேண்டும் என்றால் ஓடிபி கட்டாயம் என்ற நிலையில், ஓடிபி இல்லாமலேயே புதிய தொழில்நுட்பம் மூலம் ஹேக்கர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி வரும் தகவல் சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காவல் துறையினர் நவீன தொழில்நுட்பம் மூலம் சைபர் குற்றங்களை தடுக்க முயற்சிக்கும் நிலையில் அதைவிட புத்திசாலித்தனமாக சைபர் குற்றவாளிகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களிடம் இருந்து பணத்தை திருட முயற்சிக்கும் தந்திரங்களை செய்து கொண்டு வருகின்றார்கள்.

பொதுவாக வங்கி கணக்கில் இருந்து ஒரு நபருக்கு நெட்பேங்கிங் முலம் பணம் அனுப்ப வேண்டும் என்றால் ஓடிபி கட்டாயம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குஜராத்தை சேர்ந்த ஒரு சில தொழிலதிபர்கள் வங்கி கணக்கிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் ஓடிபி இல்லாமலேயே பணம் பரிமாறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது தனக்கு தெரியாமல் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு ஒரு கோடி ரூபாய் வரை பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளதை அடுத்து போலீசார் இது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெட் பேங்க் பரிவர்த்தனையில் ஓடிபி பெறாமல் பணம் அனுப்ப முடியாது என்ற நிலை இருக்கும்போது எவ்வாறு ஓடிபி இல்லாமல் பணம் பரிமாற்றம் ஆகிறது என்பது குறித்து இன்னும் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

புகார் அளிக்கப்பட்ட வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் உள்ள நெட் பேங்கிங் கணக்குகளில் பெயர் தெரியாத பயனாளிகள் சேர்க்கப்பட்டதாகவும் அதற்கு கூட ஓடிபி வரவில்லை என்றும், அவ்வாறு பயனாளிகள் சேர்க்கப்பட்ட பின் மிகப்பெரிய தொகைகள் அந்த வங்கி கணக்குகளுக்கு பரிமாறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து குஜராத் மாநிலத்தில் சில தொழில் அதிபர்கள் புகார் அளித்த நிலையில் இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நெட் பேங்கிங் சாப்ட்வேரில் ஏதோ தவறு இருக்கிறது என்றும் அதில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஓடிபி பெறாமல், வாடிக்கையாளரின் செல்போனை ஹேக் செய்யாமல் இந்த திருட்டு எப்படி நடக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்குள் பல தொழில் அதிபர்களின் வங்கி கணக்கிலிருந்து ஏராளமான பணம் மோசடியாக பரிவர்த்தனை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹேக்கர்களிடமிருந்து உங்கள் வங்கி கணக்கை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

நீங்கள் நெட்பேங்கிங் வசதி வைத்திருந்தால் பயனாளிகளின் பட்டியலை அவ்வப்போது சரிபார்க்கவும். நீங்கள் அறியப்படாத பயனாளியைக் கண்டால், அவர்களை அகற்றிவிட்டு, வங்கி அல்லது காவல்துறையைத் தொடர்புகொள்ளவும்.

வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் பயன்படுத்தாத பயனாளிகளை நீக்குவதை எப்போதும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பொது கணினிகள் அல்லது சைபர் கஃபே ஆகியவற்றில் நெட்பேங்கிங் செய்ய வேண்டாம். பொது வைஃபையையும் பயன்படுத்த வேண்டாம். இவை பாதுகாப்பானவை அல்ல, உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்கு விவரங்கள் திருடப்படலாம்.

ஒவ்வொரு 14 நாட்களுக்கும் உங்கள் கடவுச்சொல்லை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டு சிறப்பு எழுத்துகளுடன் எப்போதும் சீரற்ற எண்ணெழுத்து கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். கடவுச்சொல்லை எங்கும் எழுத வேண்டாம், அதற்கு பதிலாக அதை மனப்பாடம் செய்ய முயற்சிக்கவும்.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா9 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?