இந்தியா
அதிர்ச்சி.. ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி!
பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், மே 4-ம் தேதி முதல் 2 வாரங்கள் என மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கை நீட்டித்தது மட்டுமல்லாமல், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை கொரோனா ஹாட்ஸ்பாட்களில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
ஆரஞ்சு மற்றும் பச்சை எனக் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் உண்டு.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலின் படி தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் சிவப்பு கொரோனா ஹாட்ஸ்பாட் கீழ் வருகிறது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உட்பட 12 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிகள் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரோனா பாதிப்பைப் பொருத்து வாரத்திற்கு ஒரு முறை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு ஹாட்ஸ்பாட்கள் மாற்றி அமைக்கப்படும்.