சினிமா
கடற்கரையில் குதித்து குதித்து… நெட்டிசன்களின் மனதை அள்ளிய ஷிவானி.. (வீடியோ)…
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை பாலாஜி உள்பட ஒரு சிலரிடம் மட்டுமே நெருக்கமாக பழகி வந்தார் என்பதும் மற்ற போட்டியாளர்களிடம் கலகலப்பாக இல்லாதவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் வைக்கப்பட்டதாக டாஸ்க்கில் சிங்கப்பெண்ணாக வெற்றி பெற்று அதன் பின் 90 நாட்களுக்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் சிங்கப்பெண் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். எனவே, அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் அவர் அவ்வப்போது பாடல்களுக்கு நடனமாடியும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: வடிவேலு படத்துக்கு No சொன்ன நடிகைகள்…கதையையே மாற்றிய இயக்குனர்
இந்நிலையில், மும்பை சென்ற அவர் அங்கு கடற்கரையில் குதித்து குதித்து ஓடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். மேலும், பம்பாய் படத்தில் இடம் பெற்ற ‘அந்த அரபிக்கடலோரம்’பாடலை ஒலிக்க செய்துள்ளார்.