சினிமா செய்திகள்

கணவர் கைதுக்கு முன் ஷில்பா ஷெட்டியின் போஸ்ட்: தற்செயலா? திட்டமிட்டதா?

Published

on

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

ஆபாச படங்கள் எடுத்து செயலிகளுக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதமே பதிவு செய்யப்பட்டாலும் ராஜ்குந்த்ரா தான் குற்றவாளி என்பதற்கான முக்கிய ஆதாரங்களை போலீசார் திரட்டியதை அடுத்து அவரை கைதுசெய்தனர்.

ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்த செயலுக்கு அவர்தான் மூளையாக செயல்பட்டார் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு ராஜ்குந்த்ரா அவரது அலுவலகத்தில் இருந்து தான் இந்த ஆபாச படங்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த நிலையில் கணவர் கைது செய்யப்படுவதற்கு முன்னால் ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். யோகா போஸ் கொடுத்த இந்த பதிவில் ’நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நமக்கு தெரியாது. அதை மாற்றுவதற்கான சக்தி நமக்கு கிடையாது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை நிச்சயமாக கட்டுப்படுத்தலாம். யோகா மூலம் மட்டுமே அது சாத்தியம். மனதை அமைதிப்படுத்தவும், தேவையற்ற எண்ணங்களை குறைக்கவும் யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்க்கும் போது அவர் முன் கூட்டியே கணவர் கைது செய்யப்படுவதை யூகித்தாரா? அல்லது தற்செயலாக இந்த பதிவை பதிவு செய்துள்ளாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending

Exit mobile version