இந்தியா
ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு!
![shilpha and raj - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/shilpha-and-raj.jpg)
தனது கணவர் குறித்தும் தன்னை குறித்தும் தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து வெளிநாட்டு செல்போன் செயலி ஒன்று விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடைத்ததை அடுத்து மும்பை போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் இதுவரை நடந்த விசாரணையில் ஷில்பா ஷெட்டிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று தெரிய வந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தனது கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தவறான செய்திகளை வெளியிட்ட 29 ஊடகங்கள் மீது நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த அவதூறு வழக்கில் அனைத்து தவறான செய்திகளையும் நீக்க வேண்டும் என்றும், ஊடக நிறுவனங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நாளை மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.