சினிமா செய்திகள்
புகுந்து விளையாடிய கொரோனா: நடிகை ஷில்பா ஷெட்டி குடும்பத்தினர் அதிர்ச்சி
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்த ’குஷி’ பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் பல ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் ராஜஸ்தான் அணியின் உரிமையாளரும் கூட என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டியின் அம்மா, அப்பா, கணவர், குழந்தைகள் மற்றும் அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஷில்பா ஷெட்டிக்கு மட்டும் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியபோது எனது குடும்பத்தினர் அனைவரும் தனித்தனியாக ஒவ்வொரு அறையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்/ மருத்துவர் அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை கூறி உள்ளார்கள். கொரோனா தடுப்பு விதி முறைகளை கடைபிடித்து வரும் அவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகின்றனர்.
எனவே அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது வந்தவுடன் சானிடைசர் உதவியால் கையை கழுவுங்கள் என்று அறிவித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை அடுத்து அவரது குடும்பத்தினர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.