தமிழ்நாடு
ஷவர்மா கடைகளுக்கு மூடுவிழா ஆரம்பம்: தொடர்ந்து கிடைக்கும் அதிர்ச்சி தகவல்கள்!
கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கேரள மாணவி ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்ததை அடுத்து கேரளாவில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் பல கடைகள் இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கேரளாவை அடுத்து தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல இடங்களில் உள்ள ஷவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மூன்று மாணவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான உள்ளன.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை கள ஆய்வு நடத்தியபோது கெட்டுப்போன 250 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இந்த இறைச்சிகள் ஷவர்மா கடைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஷவர்மா சாப்பிட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளுக்கும் மூடுவிழா நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது.
கெட்டுப்போன இறைச்சி, குப்பையில் போடும் இறைச்சிகளை ஷவர்மா என்ற பெயரில் 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்று கொள்ளை லாபம் அடிக்கும் ஷவர்மா கடவுளர்களுக்கு முடிவு கட்டிவிட்டதாகவே கருதப்படுகிறது.