இந்தியா
ஒரே தவணையில் ரூ.12,500 கோடியை திருப்பி கொடுத்த நிறுவனம்!
கொரோனா வைரஸ் காலத்தில் வாங்கிய 12500 கோடி கடனை ஒரே தவணையில் திருப்பி கொடுத்துவிட்ட மும்பை நிறுவனத்தின் அதிரடியால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது
மும்பையை சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே தவணையில் வங்கி உள்பட பல்வேறு இடங்களில் வாங்கிய 12 ஆயிரத்து 500 கோடியை திருப்பி செலுத்தி உள்ளது.
டாடா குழுமத்தில் 18.7 சதவீத பங்குகளை நிறுவனம் வைத்துள்ள இந்த நிறுவனத்தின் முக்கிய தொழில்களாக கட்டுமானம், கப்பல் போக்குவரத்து, மின் உற்பத்தி ஆகியவை உள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் போது ஊரடங்கால் கடும் நிதிச் சிக்கலில் இருந்த இந்நிறுவனம் வங்கிகள் உள்பட பல்வேறு நிறுவனங்களிடம் கடன் பெற்றது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக நீங்கி பொறியியல் கட்டுமான பணிகள் வேகம் பெற்று உள்ளதால் பல்வேறு வங்கிகள் மற்றும் 22 நிறுவனங்களிடம் வாங்கிய 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை ஒரே தவணையில் திருப்பி கொடுத்து உள்ளதாக அறிவித்துள்ளது
இன்னும் இந்நிறுவனத்திற்கு 3,600 கோடி மட்டுமே கடன் உள்ளதாகவும் அதனையும் இன்னும் ஓரிரு மாதங்களில் திருப்பிக் கொடுத்து விடுவோம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்த்ள்ளது.