சினிமா செய்திகள்

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இயக்குனர் ஷங்கர் மருமகன் மீது வழக்குப்பதிவு

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தற்போது ரோஹித் தாமோதரன் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பவருக்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது என்பதும் இந்த திருமணத்திற்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷங்கரின் மருமகள் ரோஹித் தாமோதரன் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு ரோஹித் தாமோதரன் உள்பட 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழ் திரையுலகில் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடித்து வரும் தமிழ், தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் ஷங்கர் ‘அந்நியன்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் படத்தையும் இயக்க திட்டமிட்டு உள்ளார் என்பதும் கமல்ஹாசன் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தையும் அவர் விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version