சினிமா செய்திகள்

21 ஆண்டுகளுக்குப் பின் கம்-பேக் கொடுக்கும் ஷாலினி அஜித்… வரலாற்றுப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம்

Published

on

தல அஜித்-ன் மனைவியும் நடிகையுமான ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

21 ஆண்டுகளுக்கு முன்னர் ஷாலினி கடைசியாக பிரியாத வரம் வேண்டும் என்னும் படத்தில் நடித்திருந்தார். அதே 2000-ம் ஆண்டு நடிகர் அஜித் உடன் காதல் திருமணத்தில் இணைந்த ஷாலினி அதன் பின்னர் சினிமா துறையைவிட்டு முழுவதுமாக விலகி விட்டார். அதன் பின்னர் பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் சிறிது காலம் கவனம் செலுத்திய ஷாலினி தற்போது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி தமிழ் படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளார். அதுவும் தனது ஆஸ்தான இயக்குநர் ஆன மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஷாலினி. இயக்குநர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் வரலாற்றுத் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தில் தான் முக்கியமான வரலாற்றுக் கதாபாத்திரமாக நடிக்க உள்ளார் ஷாலினி அஜித்.

மணிரத்னம் கேட்டுக் கொண்டாதாலேயே பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஷாலினி ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தில் நாயகர்களாக ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version