இந்தியா
போதை மருந்து விவகாரம்! பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் கைது…
பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் கலந்து கொள்ளும் பார்ட்டி என்றாலே மது விருந்து, போதை மருந்துகள் களை கட்டும். பல பாலிவுட் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் போதை மருந்துகளை பயன்படுத்துவதாக சமீபகாலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணையில் சிலரும் சிக்கினார்
இந்நிலையில், மும்பை அரபிக்கலில் சொகுசு கப்பலில் சிலர் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை வைத்து பார்ட்டி நடத்துவதாக போதை மருந்து தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. எனவே, அவர்கள் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அது உண்மை என தெரிய வந்தது.
இதையும் படிங்க: திறந்த மனதுடன் போஸ் கொடுத்த கேப்ரியல்… எக்கு தப்பா கமெண்ட்டு போடும் நெட்டிசன்கள்…
மேலு, பல பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளும்,அவர்களின் நண்பர்களும் இருந்துள்ளனர். அதில், ஷாருக்கானின் மகன் சூர்யன் கானும் இருந்தார். அவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால், அவர் போதை மருந்து பயன்படுத்தினாரா என்பது தெரியவில்லை. அவரின் செல்போனை அதிகாரிகள் கைபற்றி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கப்பலில் இருந்தவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் செய்தி வெளிவந்துள்ளது.
இந்த விவகாரம் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.