சினிமா

வைரமுத்து மீது பாலியல் புகார்: இவ்வளவு மோசமா இவர்?

Published

on

பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவர் பிரபல கவிஞர் வைரமுத்து மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, விவாதப்பொருளாக மாறியுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவர் தனக்கு அனுப்பிய தகவலாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் வைரமுத்து மீதான அந்த பாலியல் குற்றச்சாட்டை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பிரபல பாடகி சின்மயி ரீட்வீட் செய்தார். இதனால் இந்த விவகாரம் வைரலாகியது.

அந்த பாலியல் குற்றாச்சாட்டில், 18 வயதில் அவருடன் ஒரு புராஜெக்டுக்காக வேலை செய்தபோது மிகவும் நல்லவராகவே தெரிந்தார். ஒரு ஜாம்பவானாக, பிரபல கவிஞராக, தேசிய விருது வென்றவராக நான் அவரை மதித்தேன். ஒருமுறை, பாடல் வரிகள் குறித்து விளக்கம் தருவதற்காக என்னிடம் வந்து கட்டி அணைத்து, முத்தம் கொடுத்தார். என்ன செய்வதென்றே தெரியாமல், அவருக்கு நன்றியை மட்டும் சொல்லிவிட்டு நான் அவர் வீட்டிலிருந்து ஓடிவிட்டேன்.

அதன் பிறகு, நான் தனியாக அவரை சந்திப்பதைத் தவிர்த்து விட்டேன். பல நேரங்களில் அவரை பணி காரணமாக தனியாக சந்திக்கும் சூழல் ஏற்பட்டாலும், அருகில் யாராவது இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்வேன். வைரமுத்து இவ்வளவு மோசமானவர் என்பது சினிமா துறையில் அனைவரும் அறிந்த உண்மை.

அவரது அரசியல் செல்வாக்கு காரணமாகவும், அதை வைத்துப் பல பாதிக்கப்பட்டவர்களை அவர் அமைதியாக்கியதாலும் யாரும் இதற்கு முன்வரவில்லை. எனக்கும் இப்படித்தான் நேர்ந்தது. இதுதான் உண்மை. நான் யாரென்று தெரியாமல் இருக்கவே விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு பின்னர் நீக்கப்பட்டாலும், அதனை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து பலரும் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version