இந்தியா
ப.சிதம்பரம் இந்திராணியை பாலியல் ரீதியாக பயன்படுத்தினாரா? பரபரப்பு தகவல்கள்!
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
இந்த சூழ்நிலையில் ப.சிதம்பரம் குறித்து இந்திராணி பாலியல் ரீதியாக சில தகவல்களை கூறியதாக கவுரவ் பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த கவுரவ் பிரதானை பிரதமர் மோடி முதல் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் டுவிட்டரில் ஃபாலோ செய்கிறார்கள். பிரதமர் மோடியே இவரை ஃபாலோ செய்வதால் இவரது கருத்துக்கள் தேசிய அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் கவுரவ் பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திராணி சிபிஐயிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுத்ததோடு என் உடலையும் பலமுறை சிதம்பரத்துக்காக கொடுத்திருக்கிறேன். அவர் பலமுறை என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார். மேலும் இரண்டு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் அவர் என்னிடம் கேட்டார் என பதிவிட்டுள்ளார்.
மேலும் சிதம்பரத்துக்கு நெருக்கமான பெண் பத்திரிகையாளர்கள் என்று ஒரு பட்டியலையே வெளியிட்டிருக்கிறார் கவுரவ் பிரதான். இந்த தகவல் பெரும் பரபரப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி ஊடக உலகிலும், அரசியல், வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது இந்த விவகாரம். அதே நேரத்தில் கவுரவ் பிரதான் போலி செய்திகளை பரப்புவதாகவும், அவரது ஒவ்வொரு போலி செய்திகளையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் பூஜா சௌத்ரி என்ற பத்திரிகையாளர்.