தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்தது என்பதும் அது மட்டுமின்றி கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆனதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மத்திய மேற்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இதன் காரணமாக பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது

புதுவை காரைக்கால் உள்ளிட்ட பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version