இந்தியா
இந்தியாவில் Covishield தடுப்பூசி சப்ளை தொடக்கம்!
![corona vaccine - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/corona-vaccine.jpg)
எல்லோருக்கும் தடுப்பூசி போட போறாங்களா?
கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்டமாகத் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த வருடத்திலிருந்தே உலகில் பல்வேறு நாடுகளும் கொரோனாவிற்கு தடுப்புமருந்துகளை கண்டுபிடித்து வந்தன. அதில் சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தின. பல்வேறு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அம்மருந்துகளின் செயல்திறனை பொருத்து அதன் தரம் நிர்ணயிக்கப்பட்டது. அதில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு மட்டுமே மருந்து தர கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதனை முறையே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் இம்மருந்துகளை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இப்போது தடுப்பூசி போடுவதில் இரண்டு கட்ட ஒத்திகை நடந்து முடிந்துள்ளது. இந்த ஒத்திகையில் மருந்துவ பணியாளர்களுக்கும் பொதுத்துறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இந்தச்சூழலில் வரும் 16 ஆம் தேதி பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இம்மருந்தின் விலை 200 எனவும் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 210 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் முதற்கட்டமாக மத்திய அரசு நேற்று 1 கோடியே 10 லட்சம் மருந்துகளை ஆர்டர் செய்தது. இன்று இந்த ஆர்டர் செய்யப்பட்ட மருத்துகள் 3 லாரிகளில் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.