தமிழ்நாடு

தன் மீது புகார் கொடுத்த பெண் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த நடிகை!

Published

on

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையும் பாஜக ஆதரவாளருமான ஜெயலட்சுமி மீது மகளிர் அணி தலைவி ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அவர் மீது ஜெயலட்சுமியும் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பாடி என்ற பகுதியை சேர்ந்த கீதா என்பவர் செம்பருத்தி என்ற மகளிர் குழுவை நடத்தி வருகிறார். அவரும் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்களும் கடந்த ஆண்டு நடிகை ஜெயலட்சுமியிடம் கடன் வாங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக அனைவரும் வறுமையில் வாடுவதாகவும் எனவே குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்று கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து அவர் வங்கியில் கடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறி 17.50 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். அந்த கடனுக்கு வட்டி மற்றும் அசல் தாங்கள் கட்டி உள்ளதாகவும் ஆனால் அந்த பணத்தை ஜெயலட்சுமி வங்கியில் இருந்து வாங்காமல் தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளதாகவும், இதுவரை நாங்கள் கட்டிய பணம் முழுவதும் வட்டி தான் என்றும், அசல் பணம் வேண்டும் என்று ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஜெயலட்சுமி கீதா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கீதா என்ற மகளிரணி குழுவைச் சேர்ந்தவர் என்னிடம் வந்து வறுமையின் காரணமாக கடன் கேட்டதாகவும், நான் அவருக்கும் அவருடைய குழுவில் உள்ள பெண்களுக்கும் 17.50 லட்ச ரூபாய் கடன் கொடுத்ததாகவும், ஆனால் தற்போது கடனை திருப்பி கேட்கும்போது மிரட்டுவதாகவும் நான் கொடுத்த பணத்தையும் அவர் மற்ற பெண்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இருதரப்பு புகாரையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version