உலகம்

ஜானுக்கு பின் ஒரு டீம் உள்ளது.. சென்டினல் தீவில் ஆய்வு செய்ய திட்டம்.. பழங்குடிகள் வாரியம் முடிவு!

Published

on

சென்டினல்: சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனுக்கு பின் சிலர் இருந்து அவரை தூண்டிவிட்டதாக தகவல்கள் வருகிறது. இதையடுத்து அந்தமான் தீவுகளில் ஆய்வு நடத்த மத்திய அரசின் பழங்குடிகள் வாரியம் முடிவெடுத்து இருக்கிறது.

கடந்த வாரம் 14ம் தேதி அந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவில் ஜான் ஆலன் என்று அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார்.சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவு ஆகும்.

இந்த நிலையில் சென்டினல் தீவிற்கு ஜான் செல்லும் போது தனியாகத்தான் சென்றார். ஆனால் அவருக்கு பின் நிறைய பேர் இருக்கிறார்கள். அவருக்கு பின் சிலர் தூண்டுதல் வேலைகளை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் ஒருவேளை கிருஸ்துவ மிஷனரியை சேர்ந்தவர்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஜானை, சென்டினல் தீவிற்கு செல்லும் முன் 3 மணி நேரத்திற்கு முன் பெண் ஒருவர் வந்து சந்தித்துவிட்டு சென்றதாகவும் தகவல்கள் வருகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version