சினிமா

அச்சச்சோ நடிகர் சரத்பாபுவுக்கு என்ன ஆச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி

Published

on

தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகராக வலம் வரும் நடிகர் சரத்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரத்பாபு. இந்த ஆண்டு வெளியான பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை படம் வரை நடித்திருக்கிறார்.

#image_title

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் சரத்பாபு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருமைத் தோழரான சரத்பாபு அவருடன் இணைந்து முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து மற்றும் பாபா வரை பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், 71 வயதான நடிகர் சரத்பாபுவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் சரத்பாபு விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் Get well Soon என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version