சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘செம்பருத்தி’ நடிகையா? ரசிகர்கள் அதிர்ச்சி

Published

on

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார்? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது

ஏற்கனவே விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மேலும் சிலரது பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ‘செம்பருத்தி’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ‘செம்பருத்தி’ சீரியல் முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் செம்பருத்தி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

செம்பருத்தி சீரியலில் ஆதிக்கடவுள் அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை பிரியாராமன். இந்த சீரியலில் உள்ள ஹீரோ கார்த்தி உள்பட பலர் தொடரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டாலும் ஆரம்பத்திலிருந்தே அகிலாண்டேஸ்வரி கேரக்டருக்கு கம்பீரம் கொடுத்து வருபவர் பிரியாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் ராஜ், ஷபானா ஆகியோர்களை அடுத்து அனைவரும் ரசிக்கும் அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் பிரியா ராமன் நடித்து வரும் நிலையில் திடீரென அவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகினால் சீரியலின் நிலைமை என்ன ஆகும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பிரியாராமன் பிக்பாஸ் செல்வது உறுதி செய்யப்பட்டால் செம்பருத்தி சீரியலை அவசர அவசரமாக முடித்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே ஜீடிவியில் பிரபலமாக இருந்த அர்ச்சனாவை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து சென்று அசிங்கப்படுத்திய விஜய் டிவி, ப்ரியாராமனை என்ன செய்ய காத்திருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version