டிவி

’செம்பருத்தி’ நடிகர்களுக்குள் என்னதான் பிரச்னை?- ஹீரோ ‘கார்த்திக்’ விலகியது ஏன்?

Published

on

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி நெடுந்தொடரின் கதாநாயகனாக நடித்து வந்த கார்த்தி தொடரின் ‘ஆதி’ கதாபாத்திரத்தில் இருந்து விலகியுள்ளார்.

செம்பருத்தி கார்த்திக் தொடரிலிருந்து விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற கேள்வி பரவலாக சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. நேற்று ஜீ தமிழ் சேனலில் செம்பருத்தி தொடர் ஒளிபரப்பின் போது கார்த்திக் தொடரில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உள்வட்டார செய்திகளின் அடிப்படையில் தொடரின் சீனியர் நடிகை மற்றும் வில்லி நடிகை ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலில் நாயகன் கார்த்திக் பலி ஆடாக ஆக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக செம்பருத்தி தொடரின் ஒட்டுமொத்த நடிகர், நடிகையர் குழுவுமே ஒரு வித ஈகோ மனப்பான்மையால் முட்டலும் மோதலுமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version