சினிமா

முட்டாள்தனமா பொய் சொல்லிட்டோம்!…ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட்டை கூறிய செல்வராகவன்….

Published

on

கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். சோழர் மற்றும் பாண்டிய வம்சத்தினருக்கு இடையேயான பகையை மையமாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. மேலும், மேக்கிங்கில் மிரட்டியிருந்தார் செல்வராகவன். ஆனால், இப்படம் வியாபாரரீதியில் வெற்றி அடையவில்லை என அப்போது செய்திகள் வெளியானது.

இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து இப்படம் பற்றிய முக்கிய தகவலை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.18 கோடி. ஆனால், மெகா பட்ஜெட் திரைப்படம் என்கிற இமேஜை உருவாக்க ரூ.32 கோடி பட்ஜெட் என கூறினோம். என்ன ஒரு முட்டாள்தனம், எனவே, இப்படம் பட்ஜெட்டை வசூலித்த பின்னரும் அது ஆவரேஜ் வசூல் என கூறிவிட்டனர். இனிமேல் எக்காரணம் கொண்டும் விளம்பரத்திற்காக பொய் சொல்லக் கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளர்.

seithichurul

Trending

Exit mobile version