சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் செல்வராகவனின் க்யூட் குழந்தை

Published

on

இயக்குநர் செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது என்பது தெரிந்ததே. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் இந்த தம்பதிக்கு பிறந்த மூன்றாவது குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று பெயர் வைத்தனர்.

தனது குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சற்று முன் சமீபத்தில் பிறந்த ரிஷிகேஷ் கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை கீதாஞ்சலி பதிவு செய்துள்ளார்.

என்னுடைய லிட்டில் பிரின்ஸ் ரிஷிகேஷ் என்று அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே நேற்று தனது 2 குழந்தைகளுடன் இருந்த புகைப்படத்தை செல்வராகவன் பதிவு செய்துள்ள நிலையில் இன்று தனது மூன்றாவது குழந்தையுடன் செல்வராகவனின் மனைவி பதிவு செய்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் ரிலீஸானதை அடுத்து தனுஷ் நடிக்கும் இரண்டு திரைப்படங்களை இயக்கவுள்ளார். அதுமட்டுமின்றி ’சாணிக்காகிதம் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version