தமிழ்நாடு

செல்வராகவன் மனைவிக்கு ஒமிக்ரான் பாதிப்பு: வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் கூறிய போது தனக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொண்டை வலி, முதுகு வலி மற்றும் தலை வலி இருப்பதாகவும் இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

மருத்துவரின் ஆலோசனைப்படிதான் தற்போது சிகிச்சை பெற்று கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

’மாலை நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய கீதாஞ்சலி செல்வராகவன் அதன்பின் வேறு படங்களை இயக்க வில்லை என்றும் இருப்பினும் அவர் ஒரு வெப்சீரிஸ் இயக்குவதற்கு உண்டான ஆரம்பகட்ட பணிகளை இது வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version