சினிமா செய்திகள்
புதுப்பேட்டை 2-க்காக செல்வராகவன் உடன் தனுஷ் இணையவில்லையா..?
தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் தற்போது புதிய படம் ஒன்றுக்காக இணைந்துள்ளதாக சமீபத்தில் இயக்குநர் செல்வாராகவனே அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டிருந்தார்.
தனுஷ்- செல்வா கூட்டணி என்றால் அது நிச்சயமாக புதுப்பேட்டை 2 படத்துக்காகத் தான் என சமுக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி மேற்படி இருவரும் புதுப்பேட்டை இரண்டாம் பாகத்துக்காக இணையவில்லை என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
செல்வா வெளியிட்ட போட்டோ ஷூட் கூட வேறு ஒரு படத்துக்காகத் தான் என்றும் விளக்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் ஒரு ஜீப் இது தொடர்பானதாகத் தான் அந்தப் புதிய படக் கதை அமைய உள்ளதாம். இதனால் ரசிகர்கள் சற்றே ஏமாந்தாலும் செல்வா- தனுஷ் கூட்டணிக்காக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்துக்கான அப்டேட் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வ ராகவனால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
ஆயிரத்தில் ஒருவர் 2-ம் பாகம் 2024-ம் ஆண்டு வெளியீட்டுக்குத் தயாராகும் என்றும் தெரிவித்துள்ளனர்.